/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவீன மின் மயானத்தில் ஓராண்டில் 751 உடல் தகனம்
/
நவீன மின் மயானத்தில் ஓராண்டில் 751 உடல் தகனம்
ADDED : ஆக 03, 2024 05:29 AM
அன்னுார்: அன்னுாரில் நவீன மின் மயானம் அமைக்க அமைக்க 'நமக்கு நாமே' திட்டத்தில், பொதுமக்கள் ஒரு கோடி ரூபாயை அரசிடம் செலுத்தினர். அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கியது.
இதையடுத்து லயன்ஸ் கிளப் உள்பட பலரிடம் 4.50 கோடி ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டு நவீன மின் மயானம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி புதிய மின் மயானம் திறக்கப்பட்டது.
அன்னுார் லயன்ஸ் கிளப் அறக்கட்டளையும் பேரூராட்சியும் மின் மயானத்தை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், ''குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் 751 உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. நிதி அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஒரு எரியூட்டும் கருவியை பொருத்துவதற்கு 45 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது,'' என்றனர்.