sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை

/

புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை

புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை

புதர் சூழ்ந்த கிளை நுாலகம் பராமரிப்பில்லாததால் கவலை


ADDED : செப் 02, 2024 02:03 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;வால்பாறை நகரில் உள்ள நுாலகம் போதிய பராமரிப்பின்றி, புதர் சூழ்ந்து காணப்படுவதால், வாசகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வால்பாறை தாலுகாவில், நகரின் மத்தியில் முழுநேர நுாலகமும், சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகங்களும் செயல்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறையில் உள்ள நுாலகத்திற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் அதிக அளவில் வருகின்றனர். பல்வேறு போட்டித்தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்களும், நுாலகத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில், நுாலக கட்டடம் மேல்பகுதி போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கிறது. நுாலகத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

வாசகர்கள் கூறியதாவது: வால்பாறை நுாலகத்துக்கு தினமும், நுாற்றுக்கணக்கான வாசகர்கள் வருகின்றனர். எஸ்டேட் பகுதியில் நுாலகம் இல்லாததால், வால்பாறை நுாலகத்தை தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நுாலகம் போதிய பராமரிப்பு இல்லாமல், பாழடைந்து காட்சியளிக்கிறது. நுாலகத்திற்குள் செல்லவே வாசகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். வாசகர்கள் நலன் கருதி, நுாலகத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us