/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் கோவிலில் அபிராமி அந்தாதி
/
ஐயப்பன் கோவிலில் அபிராமி அந்தாதி
ADDED : ஆக 11, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:ராம் நகர் ஐயப்பன் கோவிலில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு தினமும் வால்மீகி ராமாயணம், நாராயணீயம், தேவி மகாத்மியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
தொடர்ந்து, இன்று முதல் 14ம் தேதி வரை, அபிராமி அந்தாதி ஆன்மிக சொற்பொழிவு நடைபெறவுள்ளது; தினமும் மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை, கிருஷ்ண ஜகன்னாதன் சொற்பொழிவாற்றுகிறார்.
வரும் 15, 16ம் தேதிகளில் பூர்ணிமா, ஸ்ரீகாந்த் குழுவின் 'பிக்ஷு கீதா ஹரிகதா' நிகழ்ச்சி நடைபெறுகிறது.

