ADDED : மே 29, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
நெகமம்: கோவை, வெள்ளலூர், டி.105 ஆர்.ஏ.எப்., விரைவு அதிரடி படை வீரர்கள், நெகமம் போலீஸ் ஸ்டேஷனில், கமாண்டென்ட் சஞ்சய்குமார் சிங் அறிவுறுத்தலின் பேரில், பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதில், துணை கமாண்டர்கள் சுபாகர் மற்றும் கிரண்குமார் தலைமையிலான ஆர்.ஏ.எப்., வீரர்கள் மற்றும் நெகமம் போலீசார் பங்கேற்றனர்.
நெகமம் சுற்றுவட்டார பகுதி வழித்தடங்கள், சிக்கலான இடங்கள், அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், விரைவு அதிரடிப்படை கிளம்பி வரும் நேரம், கிராமங்களில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசரகால செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஒத்திகை நடந்தது.
