/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பர பதாகைகள் பராமரிப்பு பணியில் சிரமம்
/
விளம்பர பதாகைகள் பராமரிப்பு பணியில் சிரமம்
ADDED : ஜூன் 23, 2024 11:04 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், பொது இடங்களில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம், வர்த்தகம் என பல்வேறு வகைகளில் விளம்பர பதாகைகள், நிரந்தர விளம்பரப்பலகைகள் வைக்கப்படுகின்றன.
இதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும், விதிகளைப்புறக்கணித்து, அனுமதியின்றி வைக்கப்படும் அவை, இடையூறாகவும் மாறி விடுகின்றன.
குறிப்பாக, மின்கம்பங்களில், இத்தகைய விளம்பரப்பலகைகள் அதிகளவில் காணப்படுகின்றன. பொள்ளாச்சி நகர் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி கிராமங்களிலும் இதே நிலை காணப்படுகிறது.
கம்பங்களும் சேதம் அடைகின்றன. பராமரிப்பு பணியில் சிரமம் ஏற்படுகிறது. மின்கம்பங்களில் உள்ள விளம்பர பதாகைகளை, மின்வாரிய ஊழியர்கள், அவ்வப்போது அகற்றினாலும், இத்தகைய செயல் தொடர்கிறது.
எனவே, விளம்பரப்பலகை, பதாகைகளை மின்வாரியத்துக்கு சொந்தமான மின் கம்பத்திலோ, மின் கம்பிகளின் அருகிலோ கட்டுவதைத்தவிர்க்க வேண்டுமென, எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மின்கம்பங்களில் விளம்பர பதாகைகளை கட்டுவதை சிலர் வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.