sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலக்கடை விதைப் பண்ணையில் வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு 

/

நிலக்கடை விதைப் பண்ணையில் வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு 

நிலக்கடை விதைப் பண்ணையில் வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு 

நிலக்கடை விதைப் பண்ணையில் வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு 


ADDED : செப் 07, 2024 03:15 AM

Google News

ADDED : செப் 07, 2024 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;ஆனைமலை வட்டாரத்தில், கொள்ளு, தட்டைப்பயறு, உளுந்து வகைப் பயிர்கள் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வேளாண் உதவி இயக்குநர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினர், நிலக்கடை விதைப் பண்ணையில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வின்போது, வேளாண் அலுவலர் வெங்கடேசன், விதை உற்பத்தி அலுவலர் மாடசாமி, வேளாண் உதவி அலுவலர்கள் அம்சத், கரீம்ராஜா, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் திட்ட தொழில் நுட்ப உதவியாளர் சூர்யபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

குழுவினர் கூறியதாவது:

நிலக்கடலையில் அதிக மகசூல் தரக்கூடிய, 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கதிரி லேபாக்டி 1812, பவானி சாகர் 2, திண்டிவனம் 14; எள்ளில் திண்டிவனம் 14, விருதாச்சலம் 4 போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

2.5 ஏக்கர் பரப்பில் எள் மற்றும் நிலக்கடலையில் செயல்விளக்கத் திடல் அமைக்க தேசிய எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும், நிலக்கடலை, எள், பயறு வகை மற்றும் தானியங்களில் நுண்ணுாட்டக் கலவைகள், உயிர் உரங்கள் மானிய விலையில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us