sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கைகொடுத்தது ஏ.ஐ.,: யானைகள் பலி இல்லை

/

கைகொடுத்தது ஏ.ஐ.,: யானைகள் பலி இல்லை

கைகொடுத்தது ஏ.ஐ.,: யானைகள் பலி இல்லை

கைகொடுத்தது ஏ.ஐ.,: யானைகள் பலி இல்லை


ADDED : மார் 04, 2025 06:25 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவையில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் எச்சரிக்கையால், 2,500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கோவை மதுக்கரை வனப்பகுதியில், யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பலியாவது தொடர்கதையாக நடந்தது. இதையடுத்து கடந்தாண்டு வனத்துறை சார்பில் ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன், 12 டவர்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. 24 மணி நேரமும் கண்காணித்து, சமிக்ஞைகள் பெறப்பட்டன. அதன்மூலம் ரயிலை இயக்குபவருக்கு தகவல் தரப்பட்டு, விபத்துகள் தவிர்க்கப்பட்டன. இரு இடங்களில் யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்ல, சுரங்க பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஓராண்டு கடந்த நிலையில் நேற்று மாலை வனத்துறை முதன்மை தலைமை செயலர் சுப்ரியா சாஹு ஆய்வு செய்தார்.

அதில் ஓராண்டில், 5,011 முறை ஏ.ஐ.,யின் எச்சரிக்கை சமிக்ஞைகள் பெறப்பட்டதும், 2,500 முறை யானைகள் பாதுகாப்பாக, தண்டவாளத்தை கடந்து சென்றதும் தெரியவந்தது

தொடர்ந்து, இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இரண்டு மணி நேரத்திற்கு பின் ஆய்வை முடித்துச் சென்றார்.






      Dinamalar
      Follow us