/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சை மறித்த யானை போக்குவரத்து பாதிப்பு
/
பஸ்சை மறித்த யானை போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 01:24 AM

வால்பாறை:வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்டுள்ள அரசு பஸ்சை வழிமறித்த யானையால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. வால்பாறை - சாலக்குடி ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ரோட்டில் கடந்த சில நாட்களாக 'கபாலி' என பெயரிடப்பட்ட யானை, அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களை வழிமறித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் உலா வந்த 'கபாலி' யானை, மளுக்கப்பாறை நோக்கி சென்ற கேரள அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால், சுற்றுலா வாகனங்களும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், நேற்று வால்பாறை - சாலக்குடி ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.