sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்

/

கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்

கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்

கேட்டதும் பிரியாணி தராததால் கடை உரிமையாளர் மீது தாக்குதல்


ADDED : ஏப் 22, 2024 01:02 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பிரியாணி கடைக்காரரை தாக்கிய, பள்ளி மாணவர் உட்பட சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை இடிகரை ரோடு வட்டமலைபாளையத்தை சேர்ந்தவர் முகமது இப்ராம்ஷா, 47; அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு, 3 பேர் வந்து பிரியாணி பார்சல் கேட்டனர். முகமது இப்ராம்ஷா சிறிது நேரம் காத்திருக்க சொன்னார்.

ஆனால் அவர்கள், உடனே வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டனர். மூவரும், பிரியாணி கடைக்காரரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி தள்ளிவிட்டனர்.

அதில் அவர் அங்கிருந்த கண்ணாடி பொருட்கள் மீது விழுந்தார். கண்ணாடிகள் உடைந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முகமது இப்ராம்ஷா துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில் முகமது இப்ராம்ஷாவை தாக்கியது, மணியகாரம் பாளையத்தை சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவர், 17 வயதான தொழிலாளி மற்றும் புதுகோட்டையை சேர்ந்த தேவா, 48, என்பது தெரிந்தது.

போலீசார், 17 வயது சிறுவர்கள், 2 பேரையும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். தப்பி ஓடிய தேவாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us