ADDED : செப் 09, 2024 08:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : காரமடை ரங்கா நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 33. இவரது மாமா மகன் நவீன்குமார்.
இவர் தோலம்பாளையம் டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த கலையரசனுடன் தகராறு ஏற்பட்டது.
தகவலறிந்த நந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது, கலையரசன் பீர் பாட்டிலை எடுத்து, நவீன்குமாரை தாக்கினார்.
பின், நந்தகுமாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் காரமடை போலீசார் கலையரசனை கைது செய்தனர். இவர் தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.