நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம், காணியாளம்பாளையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெகமம், காணியாளம்பாளையத்தை சேர்ந்தவர் மதன் குமார், 30, விவசாயி.
இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்ல, பைக் (ஆர்.எக்ஸ்., 100) எடுக்க, பார்க்கும் போது, வீட்டில் வெளிப்புறத்தில் வண்டி இல்லாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், வீட்டின் அருகே அக்கம் பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்காததால் நெகமம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.