/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
/
பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ADDED : மார் 12, 2025 10:40 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழாவில், பக்தர்கள் பூமிதித்து அம்மனை வழிபட்டனர்.
கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்., 27ம் தேதி, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார வழபாட்டுடன் துவங்கியது. கடந்த, 4ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. 5ம் தேதி, அம்மன் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. 7ம் தேதி, திருவிளக்கு பூஜை மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கடந்த, 10ம் தேதி, சக்தி விந்தை ஆற்றில் இருந்து கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு மற்றும் அம்மன் பூ பள்ளத்தில் திருவீதி உலா நடந்தது. 11ம் தேதி, மாவிளக்கு அலங்கார பூஜை, பொங்கல் விழா, குண்டம் திறப்பு, குண்டத்திற்கு பூ போடும் நிகழ்வு நடந்தது.
நேற்று, பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். அப்போது, 'ஓம் சக்தி பராசக்தி' கோஷமிட்டனர். தொடர்ந்து அக்னி அபிஷேகம் நடந்தது.
இன்று, காலை 7:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு, 14ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.