/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓடி' உழைத்த பஸ்கள் இயக்கம் குழப்பத்தில் தவிக்கும் பயணியர்
/
'ஓடி' உழைத்த பஸ்கள் இயக்கம் குழப்பத்தில் தவிக்கும் பயணியர்
'ஓடி' உழைத்த பஸ்கள் இயக்கம் குழப்பத்தில் தவிக்கும் பயணியர்
'ஓடி' உழைத்த பஸ்கள் இயக்கம் குழப்பத்தில் தவிக்கும் பயணியர்
ADDED : செப் 08, 2024 10:44 PM

வால்பாறை:வால்பாறையில் இயங்கும் அரசு பஸ்களில், முறையான பெயர் பலகை இல்லாததால், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, மன்னார்காடு, திருப்பூர், சேலம் மற்றும் உள்ளூர்களுக்கு, 38 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர நான்கு 'ஸ்பேர்' பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை போன்ற ஊர்களில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டவையாகும். அத்தகைய பழைய 'டப்பா' பஸ்களே, தற்போது வால்பாறையில் இயக்கப்படுகின்றன.
பயணியர் கூறுகையில், 'மலைப்பாதையில் அரசு பஸ்களில் பயணிப்பது மிகவும் பயமாக உள்ளது. பிற பகுதிகளில் இயக்கப்பட்ட பழுதடைந்த பழைய பஸ்களை, வழித்தட பெயர் கூட மாற்றாமல், வால்பாறையில் இயக்குகின்றனர். இதனால், பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது,' என்றனர்.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், வால்பாறையில் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான பஸ்கள் மாற்றப்பட்டு, புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தவிர, சமவெளிப்பகுதியில் நல்ல நிலையில் இயங்கி கொண்டிருந்த பஸ்கள், தற்போது, வால்பாறை - பொள்ளாச்சி மற்றும் எஸ்டேட் பகுதிக்கும் இயக்கபடுகிறது.
சில எஸ்டேட் பகுதியில் ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளதால் தான், அரசு பஸ்கள் பழுதடைகின்றன. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரோடு மோசமாக இருந்தாலும், பஸ்கள் நிறுத்தாமல் இயக்கப்படுகின்றன,' என்றனர்.