ADDED : ஆக 01, 2024 10:29 PM
திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் இளங்கலை சட்டப் படிப்பு அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்; குறைந்த பட்சம் 5 ஆண்டு சட்ட துறை அனுபவம் அல்லது மத்திய தீர்ப்பாயம், மாவட்ட கோர்ட், ஐகோர்ட்டில் அனுபவம் கட்டாயம். எந்த குற்ற வழக்குகளிலும் தொடர்பில்லாதவராக இருக்க வேண்டும்.
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பணித்திறன் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் வேலை நாட்களில் காலை, 10:00 முதல் பகல், 2:00 மணிக்குள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். வரும், 5ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-- நமது நிருபர் -