sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை கட்டி கண்டறியும் முகாம்

/

கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை கட்டி கண்டறியும் முகாம்

கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை கட்டி கண்டறியும் முகாம்

கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை கட்டி கண்டறியும் முகாம்


ADDED : ஆக 02, 2024 05:17 AM

Google News

ADDED : ஆக 02, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை கட்டி கண்டறியும் முகாம், நேற்று துவங்கியது; வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதில் சலுகை கட்டணத்தில், பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

கர்ப்பப்பை கட்டியால் ஆபத்து இல்லாவிட்டாலும், தொந்தரவு இருக்கத்தான் செய்யும். இதை எளிய சிகிச்சை வாயிலாக சரி செய்து கொண்டால், சிரமங்களில் இருந்து விடுபடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் சாதாரணமாக இருந்தாலும், அலட்சியப்படுத்தக்கூடாது. மாதவிடாய் காலங்களில் சிலருக்கு அதிக வலி ஏற்படும். அதிகளவில் உதிரபோக்கு இருக்கும். சிலருக்கு சிறுநீர், மலம் கழிப்பதில சிரமம், அடிவயிற்றில் எப்போதும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருத்தல் போன்றவை கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறிகளாகும்.

கர்ப்பப்பை கட்டி என்பது பெண்களுக்கு, சாதாரணமாக காணப்படும், ஒரு புற்றுநோய் அல்லாத கட்டி. இருந்தாலும், மாதவிடாய் பிரச்னைகளால் இதை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, சிறிய பிரச்னையாக இருந்தாலும், அதை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் எவ்வித தொந்தரவும் இருக்காது.

கர்ப்பப்பையில் ஏதாவது பிரச்னை என்றால், அதை அகற்றி விடலாம் என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் அவசியமானவை. எளிதாக குணப்படுத்தக்கூடிய இந்த கட்டியை, தழும்புகள் இன்றி, சிகிச்சை செய்த சுவடே தெரியாத வகையில், ஆஞ்சியோகிராம் முறையில் குணப்படுத்த முடியும்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இச்சிகிச்சைக்கான அதிநவீன கருவிகள், வசதிகள் உள்ளன. மருத்துவமனை கதிர்வீச்சியல் துறையில் ஆக.,1 முதல் ஆக.,31ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில், தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை இம்முகாம் நடக்கிறது. சலுகை கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us