sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

/

கோவையில் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

கோவையில் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

கோவையில் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?


ADDED : ஜூலை 07, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 07, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று 8 மி.மீ., நாளை 5 மி.மீ., 10ம் தேதி 1 மி.மீ. மழை பதிவாக வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை, 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் ஆகவும்பதிவாகும்.

காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 60 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்று மணிக்கு, 16 முதல் 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.

வரும் 3 நாட்களுக்கு, மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தூறல் அல்லது லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழையைப் பயன்படுத்தி, குளிர்கால கம்போடியா பருத்தி விதைப்பிற்கான நிலம் தயாரிக்கவும்.

கொடி பூசணி வகைகளை, போதுமான வடிகால் வசதி செய்து விதைக்கவும்.

நிலவும் வானிலையில், வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதல் அதிகமாக வாய்ப்புள்ளது.

கண்காணித்து, தேவைப்பட்டால் ஒரு லிட்டர் நீரில், டைமெத்தோயேட் 1 மி.லி., கலந்து தெளிக்கவும். பருவமழை கால திராட்சையில் காய்ந்த, வளர்ச்சியில்லாத கிளைகளை கவாத்து செய்ய இது நல்ல தருணம்.

இத்தகவலை, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us