sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!

/

சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!

சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!

சந்தோஷ வானில் 'பறக்கிறது' கோவை! விரைவில் விமானநிலைய விரிவாக்கம்; தடை நீங்கியதால் 'டேக் ஆப்' ஆகிறது!

1


ADDED : ஆக 22, 2024 12:43 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு நிபந்தனையின்றி வழங்குவதாக, தமிழக அரசு கடிதம் கொடுத்திருப்பதால், இழுபறியாகவே தொடர்ந்த விரிவாக்கப்பணிகள், விரைவில் துவங்கவுள்ளன. இதனால், கோவை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை, பீளமேட்டில், 420 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் உள்ளது; 9,500 அடி நீளத்துக்கு ஓடுபாதை அமைந்திருக்கிறது. சர்வதேச விமான நிலையமாக இருந்தாலும், பெரிய அளவிலான விமானங்கள் வந்து செல்ல வசதி இல்லாததால், ஓடுபாதையை, 12 ஆயிரத்து, 500 அடி நீளம் கொண்டதாக விரிவாக்கம் செய்ய, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதற்கு தேவையான, 652 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க, தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

அதில், பாதுகாப்பு துறைகளுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. தனியார் நிலங்களில், 558.87 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள, விமான நிலைய ஆணையத்துக்கு கலெக்டர் கிராந்திகுமார் கடிதம் அனுப்பினார்.

தொய்வு ஏற்பட்டது ஏன்?


ஆனால், சிவில் ஏவியேஷன் கொள்கை 2016ன் படி, எவ்வித நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்பதால், ஆணையம் தரப்பில் குத்தகைக்கு நிலத்தை பெற முன்வரவில்லை. இதன் காரணமாக, விமான நிலைய விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

லோக்சபா தேர்தல் சமயத்தில், இப்பிரச்னை கிளம்பியது. அப்போது, 'தேர்தல் முடிந்ததும் சுமூக தீர்வு காணப்படும்' என, தி.மு.க., தரப்பில் உறுதி கூறப்பட்டது. அதன்படி, தற்போது, தனியார் நிலங்கள் கையகப்படுத்தும் பணி, 97 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது; இம்மாத இறுதிக்குள் முடிக்க, மிதமுள்ள நிலத்தை கையகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பின், நில உரிமையாளர்கள் யாரேனும் இழப்பீடு பெறாமல் இருந்தால், அதற்குரிய தொகையை கோர்ட்டில் செலுத்தி விட்டு, கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

முதல்வருடன் சந்திப்பு


இச்சூழலில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை, எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்க, கோரிக்கை விடுத்தார்.

அதற்கு முன்னதாகவே, தமிழக அரசு கையகப்படுத்திய பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களை, எவ்வித நிபந்தனையுமின்றி, 99 ஆண்டு குத்தகைக்கு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு இலவசமாக வழங்குவதாகவும்; விமான நிலையத்தை தனியார் வசம் வழங்கும் பட்சத்தில், வருவாயை தமிழக அரசுக்கு பகிர்ந்து கொடுக்க பரிசீலிக்க வேண்டும் எனவும், இந்திய விமான நிலைய ஆணைய தலைவருக்கு, தமிழக அரசின் தலைமை செயலர் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதன் மூலம் நிலத்தை ஒப்படைப்பதில், இருந்த சிக்கல் விலகியிருப்பதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

ஏனெனில், கையகப்படுத்திய நிலத்தை ஆணையம் வசம் ஒப்படைத்து விட்டால், விரிவாக்கப் பணி உடனடியாக துவங்கும். மும்பையை சேர்ந்த நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு சமர்ப்பித்து, தயார் நிலையில் இருக்கிறது.

'மாஸ்டர் பிளான்' ரெடி!


கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், ''விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை, 99 ஆண்டு குத்தகைக்கு நிபந்தனையின்றி வழங்குவதாக, தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 'மாஸ்டர் பிளான்' தயாராக இருக்கிறது. நிலம் ஒப்படைக்கப்பட்டதும், விரிவாக்கப் பணிக்கு டெண்டர் கோரப்படும். ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் பணி துவங்கும்,'' என்றார்.

நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் கோரியதும் பணிகள் துவங்கும் என்பதால், தொழில்துறையினருக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.

'கோவைக்கு முதலீடுகள் வரும்'

'கொங்கு குளோபல் போரம்' அமைப்பின் இயக்குனர் சதீஷ் கூறுகையில், ''கோவையில் தற்போதுள்ள விமான நிலையத்தில் ஆண்டு ஒன்றுக்கு, 20 லட்சம் பயணிகள் கையாளும் வகையிலேயே வசதிகள் உள்ளன. என்றாலும், கடந்தாண்டு மட்டும், 30 லட்சம் பயணிகள் பயனடைந்தனர். வெளிநாடுகளில் இருந்து நேரடி விமான சேவையை அதிகரிக்க, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். டெர்மினலில் பில்டிங், ஓடுதளம் அமைக்கப்படும். கிழக்காசிய மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து, நேரடி விமான சேவை துவக்கப்படும்; முதலீடுகள் கோவையை நோக்கி வரும். அத்தகைய சூழலில் வேலைவாய்ப்பு பெருகும். வர்த்தக ரீதியாக கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியடையும்,'' என்றார்.



'இனி, மத்திய அரசு பொறுப்பு'

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், ''லோக்சபா தேர்தல் சமயத்தில் தி.மு.க., உறுதியளித்தபடி, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுக்கும் பணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறோம். இனி, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து தர வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அ.தி.மு.க., ஆட்சியில், எட்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. தி.மு.க., ஆட்சியில் முழு நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் காட்டுவார்,'' என்றார்.








      Dinamalar
      Follow us