/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டில்லி போராட்டத்திற்கு ஆதரவு கோவை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
டில்லி போராட்டத்திற்கு ஆதரவு கோவை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
டில்லி போராட்டத்திற்கு ஆதரவு கோவை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
டில்லி போராட்டத்திற்கு ஆதரவு கோவை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2024 08:28 PM
கோவை:மூன்று சட்டங்களுக்கு எதிராக, டில்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கோவை வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு(ஜேக்) சார்பில், டில்லி, ஜந்தர் மந்த் பகுதியில் நேற்று போராட்டம் நடத்தினர். இதில், கோவை வக்கீல் சங்க உறுப்பினர்கள், 100 க்கும் மேற்பட்டோர் ரயில் மற்றும் விமானத்தில் சென்று பங்கேற்றனர்.
டில்லியில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி,கோஷம் எழுப்பினர்.