/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருக்குலைந்த ரோடு; ஓட்டுநர்கள் அதிருப்தி
/
உருக்குலைந்த ரோடு; ஓட்டுநர்கள் அதிருப்தி
ADDED : மே 01, 2024 11:03 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செல்லப்பகவுண்டன்புதுார் செல்லும் ரோடு, சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்ட, செல்லப்பகவுண்டன்புதுார் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், ரோட்டின் வளைவு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தினமும் வேலை மற்றும் கல்லுாரி செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். விவசாயிகள் விளை பொருட்களை பைக்கில் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்பவர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

