sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வயநாட்டில் இறந்தவர்களுக்கு கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி

/

வயநாட்டில் இறந்தவர்களுக்கு கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி

வயநாட்டில் இறந்தவர்களுக்கு கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி

வயநாட்டில் இறந்தவர்களுக்கு கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி


ADDED : ஆக 06, 2024 06:11 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு, பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கேரள மாநிலம், வயநாடு மாநிலம், முண்டக்கல், சூரல்மலை பகுதியில், பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், நுாற்றுக்கணக்கான வீடுகள் புதையுண்டன. இதில், 350க்கும் மேற்பட்டர்கள் உயிரிழந்தனர்.

நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து பலர் மீட்கப்பட்ட நிலையில், பாதுகாப்பான இடத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக் கரம் நீட்டும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியும் வைக்கின்றனர்.

அணிவதற்கான உடை, படுக்கை விரிப்பு, போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் அனுப்புகின்றனர்.

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், மாணவ, மாணவியர் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் சேகரம் செய்யப்பட்டு, கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதேநேரம், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. கல்லுாரிச் செயலாளர் விஜயமோகன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதாமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்த கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us