/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சை நிறுத்தாததால் வியாபாரிக்கு இழப்பீடு
/
பஸ்சை நிறுத்தாததால் வியாபாரிக்கு இழப்பீடு
ADDED : மார் 11, 2025 05:37 AM
கோவை : கோவையை சேர்ந்த வியாபாரி இருதய ராஜா என்பவர், கோவை- (துாத்துக்குடி) குரும்பூர் செல்வதற்காக, ரெட்பஸ் ஆப்பில், ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தார். அதன்படி, 2023, ஆக., 26ல் தனியார் ஆம்னி பஸ்சில் பயணித்தார்.
மறு நாள்காலை குரும்பூருக்கு ஆறு கிலோ மீட்டர் துாரத்திற்கு முன், திருச்செந்துார் மெயின் ரோட்டில் அவரை இறக்கி விட்டனர். குரும்பூருக்கு பஸ் போகாது என்று கூறினர்.
இதனால் கோவை நுகர்வோர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவருக்கு, ரெட்பஸ் நிறுவனம், 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க, கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.
அதன்படி, இழப்பீடு தொகைக்கான காசோலையை, பஸ் நிறுவனத்தினர் நேற்று நுகர்வோர் ஆணையத்தில்வழங்கினர்.