sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: ஆன்லைனில் மதிப்பெண் பதிவேற்றம்

/

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: ஆன்லைனில் மதிப்பெண் பதிவேற்றம்

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: ஆன்லைனில் மதிப்பெண் பதிவேற்றம்

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: ஆன்லைனில் மதிப்பெண் பதிவேற்றம்


ADDED : மே 03, 2024 11:16 PM

Google News

ADDED : மே 03, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், ஆன்லைனில் மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி துவங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 1ல் துவங்கி 22ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ல் துவங்கி 25ம் தேதி வரையும் நடந்தது. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 26ல் துவங்கி, ஏப்., 8ம் தேதி நிறைவடைந்தது.

மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக, கோவை கணபதி சி.எம்.எஸ். தனியார் பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிக் பள்ளி என, மூன்று மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, சமீபத்தில் நிறைவடைந்தன.

இதைத்தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விடைத்தாள்கள் மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வந்தது. இப்பணிகள் அனைத்தும் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில், இரண்டு மையங்கள், பொள்ளாச்சியில் ஒரு மையம் என, மூன்று மையங்களில் நடந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தது. ஆன்லைனில் மதிப்பெண் பதிவேற்றும் பணி உள்ளிட்ட இதர பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் முடிந்த பின், திட்டமிட்டபடி வரும், 6ம் தேதி பிளஸ் 2 மற்றும் 10ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us