/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருதய பாதிப்பு சிகிச்சைக்கு கட்டணத்தில் சலுகை
/
இருதய பாதிப்பு சிகிச்சைக்கு கட்டணத்தில் சலுகை
ADDED : செப் 05, 2024 11:43 PM
'கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் இதன் அனைத்து கிளைகளிலும், சிறப்பு இருதய பரிசோதனை முகாம் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது,' என, கே.எம்.சி.எச்., முழு உடல் பரிசோதனை மைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
இருதயத்தில் பாதிப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பால், மாரடைப்பு ஏற்படுகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., ரத்தத்தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், டிஎம்டி, எக்கோ ஆகிய பரிசோதனைகள் வாயிலாக இருதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறியலாம். உரிய சிகிச்சை அளித்து மாரடைப்பை தடுக்கலாம்.
இருதயத்தில் அடைப்பு இருப்பதை உறுதி செய்ய ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அடைப்பு இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக அடைப்புகளை நீக்கி, இருதய நலத்தை பாதுகாக்கலாம்.
இருதய பாதிப்பு மற்றும் மாரடைப்புக்கான காரணிகளில் ஒன்றான மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம், 30 நிமிட உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தது, 7 மணி நேரம் துாக்கம், உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் இதன் அனைத்து கிளைகளிலும், கடந்த 2ம் தேதி துவங்கிய சிறப்பு இருதய பரிசோதனை முகாம் வரும் 30ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. இதில், சர்க்கரை பரிசோதனை, கொழுப்பு சத்து, ஈ.சி.ஜி., எக்கோ/டிஎம்டி பரிசோதனைகள் ரூ.1,299க்கு மேற்கொள்ளப்படுகிறது; மருத்துவர் ஆலோசனை இலவசம். மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளலாம்.
முகாம் நடக்கும் இடங்கள்: அவிநாசி ரோடு, கோவில்பாளையம் மற்றும் ஈரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, கோவை ராம்நகரில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டர், சூலுாரில் உள்ள கே.எம்.சி.எச்., மல்டிஸ்பெஷாலிட்டி.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.