sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆபத்தான மரத்தை வெட்டுங்க! நுாலக வாசகர்கள் வலியுறுத்தல்

/

ஆபத்தான மரத்தை வெட்டுங்க! நுாலக வாசகர்கள் வலியுறுத்தல்

ஆபத்தான மரத்தை வெட்டுங்க! நுாலக வாசகர்கள் வலியுறுத்தல்

ஆபத்தான மரத்தை வெட்டுங்க! நுாலக வாசகர்கள் வலியுறுத்தல்


ADDED : ஆக 06, 2024 09:59 PM

Google News

ADDED : ஆக 06, 2024 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறை நுாலகத்தின் முன்பாக உள்ளஆபத்தான மரங்களை வெட்ட வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நுாலகத்தை நாள் தோறும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்கள் நுாலகத்துக்கு வருகின்றனர்.

இந்நிலையில், நுாலகத்தின் முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்ட வேண்டும் என்று, பல ஆண்டுகளாக வாசகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நுாலகத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

வாசகர்கள் கூறுகையில், 'வால்பாறையில் தற்போது காற்றுடன் மழை பெய்கிறது. மழையினால் நுாலகத்தின் முன்பாக உள்ள மரம் சரிந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் நுாலகத்தை பயன்படுத்தும் வாசகர்கள், எதிரில் உள்ள பஸ் ஸ்டாண்டில் நிற்கும் மக்கள், வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us