sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'சைபர்' குற்றங்கள் இரு மடங்கு அதிகரிப்பு

/

'சைபர்' குற்றங்கள் இரு மடங்கு அதிகரிப்பு

'சைபர்' குற்றங்கள் இரு மடங்கு அதிகரிப்பு

'சைபர்' குற்றங்கள் இரு மடங்கு அதிகரிப்பு


ADDED : ஜன 02, 2025 10:36 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்தாண்டு சைபர் குற்றங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

சமீப காலமாக மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைபர் கிரைம் தொடர்பாக தினசரி 20 முதல் 30 புகார்கள் பதிவாகின்றன.

ஆன்லைனில் வேலைவாய்ப்பு, பெட் எக்ஸ் மோசடி, ஆன்லைன் டிரேடிங் மோசடி, எஸ்.பி.ஐ., ரிவார்ட் மோசடி என பல்வேறு வழிகளில் மோசடிகள் நடக்கின்றன. இது குறித்து பல்வேறு வழிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும், ஏமாந்து பணத்தை இழப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது.

கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 42 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு பணம் மோசடி தொடர்பாக 39 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில், ரூ. 19 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி நடந்துள்ளது. இது தவிர, 956 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 கோடியே 64 லட்சத்து 85 ஆயிரத்து 216 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஜன., முதல் டிச., வரை மொத்தம், 1056 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 137 பண மோசடி வழக்குகளில் ரூ. 42 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரம் மோசடி நடந்துள்ளது. இதில், 2 கோடியே, 22 லட்சத்து, 82 ஆயிரத்து 359 ரூபாய் உரிய நபர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2024ம் ஆண்டு ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெரியாத எண்கள், நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம். போலீஸ், சுங்கத்துறை, கூரியர் என அழைத்து வங்கி கணக்கு விபரங்கள், ஓ.டி.பி., உள்ளிட்டவை கேட்டால் கொடுக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us