sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு

/

பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு

பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு

பழுதடைந்த பள்ளிக்கு ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட முடிவு


ADDED : செப் 17, 2024 11:24 PM

Google News

ADDED : செப் 17, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சி, 76வது வார்டு, தெலுங்குபாளையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 1.95 ஏக்கர் பரப்பளவில், 7,500 சதுரடியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. 0.95 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானம் இருக்கிறது.

இப்பள்ளியில், 266 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடம், 72 ஆண்டுகள் முன் கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இப்பள்ளியை நிர்வகித்தவர்களால் தொடர்ந்து பராமரிக்க இயலாததால், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்விடத்தை கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இப்பள்ளி மாணவ, மாணவியர் நலன் கருதி, தனியார் நிறுவன சமுதாய பொறுப்பு நிதியை பயன்படுத்தி, வகுப்பறை கட்டி, மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

ரூ.1.15 கோடியில், 6,818 சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன், 10 வகுப்பறை, அலுவலக அறை கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார்.

துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கல்வி குழு தலைவர் மாலதி, உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us