sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு

/

வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு

வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு

வாழைத்தார் வரத்து சரிவு; ஏலத்தில் விலை உயர்வு


ADDED : ஆக 15, 2024 11:41 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்துள்ளனர் விவசாயிகள். அறுவடை செய்யப்படும் வாழைத்தார், தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. வாழைத்தார் வரத்து வழக்கத்தை விட குறைவாக இருந்ததால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மார்க்கெட்டில், செவ்வாழை (ஒரு கிலோ) - 80, கதளி - 50, ரஸ்தாளி - 50, நேந்திரன் - 55, பூவன் - 45, சாம்பிராணி வகை - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட, செவ்வாழை, கதளி, பூவன் போன்றவைகள் 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. சாம்பிராணி, நேந்திரன் - 5 ரூபாயும், ரஸ்தாளி அதிகபட்சமாக 15 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'உள்ளூர் வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து இருந்தது. மொத்தத்தில் வாழைத்தார் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us