sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேரோட்ட வீதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை  

/

தேரோட்ட வீதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை  

தேரோட்ட வீதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை  

தேரோட்ட வீதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை  


ADDED : ஏப் 24, 2024 10:40 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கும் வீதிகளில், டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. சுற்றுப்பகுதி கிராமங்கள், பிற மாவட்டங்களிலிருந்தும் மக்கள் தேரோட்டத்தை காண நகரில் திரண்டு வருகின்றனர்.

தேரோட்டம் கோவிலில் துவங்கி பொள்ளாச்சி ரோடு, தளிரோடு, குட்டைத்திடல், நெல்லுக்கடை வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் கோவிலுக்கு திருத்தேர் வந்தடைகிறது.

பொதுமக்கள் தேரோடும் வீதிகளில் நின்று பார்வையிடுகின்றனர். இதில், பசுபதி வீதியில் தளிரோடு அருகில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

திருவிழாவையொட்டி, இப்பகுதியில் 'குடி'மகன் களின் கூட்டமும் அதிகமாக இருக்கும். இதனால், பொதுமக்கள் நிம்மதியாக அவ்வழியாக வந்துசெல்ல முடியாமலும், பாதுகாப்பில்லாமலும் உள்ளது.

தேரோட்டத்தையொட்டி, தற்காலிகமாக இன்று தேரோட்ட பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us