/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 19, 2024 10:45 PM
கோவை:கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், இன்று மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
மின்வாரிய ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, 2024 ஜன., 1 முதல், 2024 மே 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி, காப்பீட்டு நிறுவனத்திடம் மருத்துவ செலவினங்களை முழுமையாக பெற வேண்டும்.
கணவரை இழந்தவர்கள், விவாகரத்தானவர்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஓய்வூதியர்கள் திரளாக பங்கேற்க, அழைப்பு விடப்பட்டுள்ளது.

