sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'

/

'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'

'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'

'கஷ்டங்களை துணிச்சலுடன் சந்தித்தால் விலகி போய் விடும்'


ADDED : ஜூன் 02, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை முத்தமிழ் அரங்கத்தின் வாராந்திர இலக்கிய சந்திப்பு கூட்டம், ரேஸ்கோர்ஸ் நடைபாதை சதுக்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த கோவை முத்தமிழ் அரங்க தலைவர் ராமசாமி பேசியதாவது:

இன்பமும், துன்பமும் இணைந்ததுதான் மனித வாழ்க்கை. இவை இரண்டும் இல்லாமல் வாழ்க்கையில்லை என்பதை தான், திருவள்ளுவர் தன் குறள் நெறி வழியாக உணர்த்துகிறார்.

மகிழ்ச்சியும், கவலையும் அவரவர் மனநிலையை பொறுத்தே அமைகிறது. இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும். 'குணப்படுத்த முடியாத நோய் வந்து விட்டால், சகித்துக் கொள்ள வேண்டும்' என்கிறது, ஒரு சீனப் பழமொழி.

கஷ்டங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டால், அது விரைவில் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். கவலை வரும் போது, நல்ல சிந்தனைகளில் மனதை செலுத்த வேண்டும். நல்ல இசையை கேட்டால் கவலை மறைந்து விடும். மனதை அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு.

இவ்வாறு, அவர் பேசினார்.

கவிஞர்கள் பலர், தங்களின் கவிதைகளை அரங்கில் வாசித்தனர். முத்தமிழ் அரங்க செயலாளர் ராஜேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us