sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொந்த மொபைல்போனில் பதிவு   மின் கணக்கீட்டாளர்கள் அதிருப்தி 

/

சொந்த மொபைல்போனில் பதிவு   மின் கணக்கீட்டாளர்கள் அதிருப்தி 

சொந்த மொபைல்போனில் பதிவு   மின் கணக்கீட்டாளர்கள் அதிருப்தி 

சொந்த மொபைல்போனில் பதிவு   மின் கணக்கீட்டாளர்கள் அதிருப்தி 


ADDED : ஜூன் 07, 2024 07:46 PM

Google News

ADDED : ஜூன் 07, 2024 07:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:தமிழக மின்வாரியத்தில், தற்போது, மின் கணக்கீட்டு பணியை எளிதாக்கும் வகையில், 'மொபைல் ஆப்' பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, மின் கணக்கீட்டாளர், அவரவர் மொபைல்போனில், 'கணக்கீட்டு ஆப்' பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

வீடுகளுக்குச் சென்று, 'ஆப்டிக்கல் கேபிள்' உதவியுடன், மின்மீட்டர் மற்றும் மொபைல்போனுடன் இணைத்தால், உடனுக்குடன், மின்பயன்பாடு, கட்டண விபரம், மின்வாரிய இணையதளத்திலும், மின்நுகர்வோருக்கும் சென்று விடும்.

ஆனால், இப்பணிக்கு, மின் கணக்கீட்டாளர்கள், அவரவரின் சொந்த மொபைல்போன் மற்றும் 'டேட்டா'வை பயன்டுத்துவதால், அவர்கள் செய்வதறியாது திணறுகின்றனர்.

மின் கணக்கீட்டாளர்கள் கூறியதாவது:

மின்வாரியத்தில், மின் கணக்கீட்டாளர்கள் மற்றும் கணக்கீட்டு ஆய்வாளர்கள் பணியிடங்கள் பெருமளவு காலியாகவே உள்ளன. இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. வருவாய் மேற்பார்வையாளர்களே கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இச்சூழலில், அவரவரின் சொந்த மொபைல்போனைப் பயன்படுத்துவும், டேட்டாவைப் பயன்படுத்தி ஆன்லைனில் மின் கணக்கீட்டை பதிவு செய்யவும் நிர்பந்தம் செய்யப்படுகிறது.

இப்பணிக்காக, மின்வாரியம், எந்தவொரு தொகையும் தனியாக வழங்குவதில்லை. அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடு கொண்டு வரப்பட்டாலும், அதற்கேற்ப வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us