sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் அதிருப்தி

/

பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் அதிருப்தி

பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் அதிருப்தி

பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் அதிருப்தி


ADDED : செப் 11, 2024 10:26 PM

Google News

ADDED : செப் 11, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாமரைக்குளத்தில் அரசு பள்ளி அருகே ரோட்டோரத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், தொற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்குளத்தில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி சுவற்றின் அருகே உள்ள கால்வாயில், கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

தேங்கி நிற்கும் கழிவுநீரால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் கூறுகையில், 'தாமரைக்குளம் அரசு பள்ளி அருகே, தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்று ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் சுகாதார பாதிப்பு நிலவுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us