/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., வாக்குறுதிகளை நம்பாதீர்: ஜி.கே.வாசன் கோவையில் பிரசாரம்
/
தி.மு.க., வாக்குறுதிகளை நம்பாதீர்: ஜி.கே.வாசன் கோவையில் பிரசாரம்
தி.மு.க., வாக்குறுதிகளை நம்பாதீர்: ஜி.கே.வாசன் கோவையில் பிரசாரம்
தி.மு.க., வாக்குறுதிகளை நம்பாதீர்: ஜி.கே.வாசன் கோவையில் பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 04:56 AM

கோவை : ''தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் இனியும் நம்ப வேண்டாம்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
கோவை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கோவை இடையர்பாளையம் பிரிவில் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியை நன்கு அறிந்தவர். இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து மக்களில் அடிப்படை தேவைகளை அறிந்து வைத்துள்ளார்.
அதனால் அவரை வெற்றி செய்ய வேண்டிய பொறுப்பு கோவை தொகுதி மக்களுக்கு உள்ளது. அதன் மூலம் சிறந்த எம்.பி.,யை தேர்ந்தெடுத்த பெருமை கோவை மக்களுக்கு சேரும். மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வருவது மிக அவசர தேவையாகும். இன்றைய தமிழக வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம்.
தி.மு.க., அரசு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு என, மக்கள் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாக தி.மு.க., உள்ளது. காலையில் குடும்ப தலைவிக்கு, 1000 ரூபாய் உதவி தொகை கொடுத்து விட்டு, மாலையில் குடும்பத் தலைவரிடமிருந்து டாஸ்மாக் வழியாக அதை தி.மு.க., பிடுங்கி கொள்கிறது. தி.மு.க., டாஸ்மாக் வியாபார அரசாக மாறி இருக்கிறது.
இனியும் பெண்கள் தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.இவ்வாறு, அவர் பேசினார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து, மலுமிச்சம்பட்டியில் வாசன் பேசியதாவது:
கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியில், கோவை, பொள்ளாச்சி முதல் வரிசையில் உள்ளது. பரம்பிக்குளம்- - ஆழியாறு, நல்லாறு, பொள்ளாச்சி வழியே சென்னைக்கு ரயில் உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற வசந்தராஜன் வெற்றி பெறவேண்டியது அவசியம், இத்தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு, 2026-ல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப போடும் ஓட்டாகும்.
நீங்கள் போடும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கானது. இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், உலகளவில் இரண்டாமிடத்திற்கு உயரும். உங்களுக்காக உழைக்க தாமரைக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

