sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆர்.டி.இ., விதிப்படி மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்

/

ஆர்.டி.இ., விதிப்படி மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்

ஆர்.டி.இ., விதிப்படி மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்

ஆர்.டி.இ., விதிப்படி மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்


ADDED : ஏப் 29, 2024 02:15 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;''அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி,(ஆர்.டி.இ.,) மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்,'' என்று, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஒவ்வொரு ஒரு கிலோமீட்டருக்கும், ஒரு அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காமல், தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடுகின்றனர்.

தங்கள் சொந்த விருப்பத்தின்பேரில், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர், அவர்களது செலவிலேயே சேர்த்துக் கொள்வதில், எந்தத் தடையும் இல்லை.

ஆனால், இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு கட்டணம் செலுத்தாது என்பதை அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். எந்தப் பகுதிகளில் நேரடியாக அரசே, கல்வி தரும் வாய்ப்பு இல்லாமல் உள்ளதோ, அந்தப் பகுதிகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தையின் கல்வி உரிமையை அரசு பாதுகாக்கும்.

அதேபோல, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவு மக்கள், தனியார் பள்ளிகளில் சேர விரும்பும்போது, தனியார் பள்ளிகள் பாகுபாடு காட்டாமல், அனைத்துப் பிரிவினரையும் சேர்க்க வேண்டும்.

ஆர்.டி.இ., விதிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்துவதை, அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஆர்.டி.இ.,இலவச கல்விக்கு ஒதுக்கும் முழு தொகையையும், அரசுப் பள்ளிகளில் செலவிடும்போது, அங்கு தரமான கல்வி வழங்க முடியும்.

எனவே, இந்த கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளையும் அருகாமைப் பள்ளிகளாக அறிவித்து, அனைத்துக் குழந்தைகளும் சமமான கற்றல் வாய்ப்பு பெறும் வகையில், மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us