ADDED : பிப் 24, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம், ; நெகமம், காட்டம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்ற முதியவர் கார் விபத்தில் உயிரிழந்தார்.
நெகமம், ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 77, விவசாயி. இவர், தனது சொந்த வேலைக்காக, ஜக்கார்பாளையத்தில் இருந்து காட்டம்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
அப்போது, ஜக்கார்பாளையத்தைச் சேர்ந்த மெக்கானிக் கண்ணன், 40, என்பவர், காரில் செல்லும் போது ஆறுமுகம் ஒட்டி வந்த பைக்கை 'ஓவர் டேக்' செய்யும் போது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.