sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாம்; பெண் யானை குட்டி ஈன்றதால் கண்காணிப்பு

/

தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாம்; பெண் யானை குட்டி ஈன்றதால் கண்காணிப்பு

தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாம்; பெண் யானை குட்டி ஈன்றதால் கண்காணிப்பு

தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாம்; பெண் யானை குட்டி ஈன்றதால் கண்காணிப்பு


ADDED : செப் 12, 2024 09:16 PM

Google News

ADDED : செப் 12, 2024 09:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : தேயிலை எஸ்டேட்டில், பகல் நேரத்தில் யானைகள் கூட்டமாக முகாமிட்டதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர்.

வாவால்பாறையில், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு, முடீஸ் தாய்முடி, பச்சமலை, வில்லோனி, தோணிமுடி, சோலையாறு உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், முடீஸ் தாய்முடி எஸ்டேட்டில், நேற்று முன்தினம் காலை, 15க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டன. இதனால் அந்தப்பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர்.

ரோட்டை ஒட்டியுள்ள தேயிலை காட்டில் யானைகள் முகாமிட்டதால், சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

முடீஸ் முத்துமுடி எஸ்டேட் பகுதியில், 11 யானைகள் முகாமிட்டன. இதில் ஒரு கர்ப்பிணி யானை வேறு எங்கும் செல்லாமல் தேயிலை எஸ்டேட்டிலேயே முகாமிட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பெண் யானை குட்டியை ஈன்றது. தேயிலை காட்டில் யானை குட்டி ஈன்றதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை வேறு பகுதிக்கு இடம் பெயரும் வரை தொழிலாளர்களை அந்தப்பகுதியில் தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்ககூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'வால்பாறையில் பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் யானைகள் ரோட்டை கடக்கும் என்பதால், ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கூடாது. இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது, பெண் யானை குட்டி ஈன்றுள்ள பகுதிக்கு தொழிலாளர்கள் யாரும் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us