ADDED : பிப் 21, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; குப்பனுாரைச் சேர்ந்தவர் சண்முகம், 60; விவசாயி.
இவர் கடந்த 18ம் தேதி அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், பைக்கில் செல்லும்போது, குறுக்கு சாலையில் இருந்து திடீரென வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சண்முகம், முதலில் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார்.
அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.