sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 11, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

கோவை மாவட்டத்திலும் திருப்பூர் மாவட்டத்திலும் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதை உடனடியாக நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

நதிகள் தேசியமயமாக்கப்படாததால் மாநிலங்களிடையே நதிநீர் பிரச்னை நீடித்து வருகிறது. தி.மு.க., கூட்டணி கட்சி ஆட்சி அமைத்துள்ள கர்நாடக மாநிலத்தில் பேசி மேகதாது அணை கட்டுவதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரியில் உரிய நீரை பெற்று இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆனைமலை- - நல்லாறு, பாண்டியாறு - -புன்னம்புழா திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே உள்ள, 13 ஆற்றுநீர் பிரச்னைகள் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழக அரசு அரசாணையின்படி, விவசாயிகளுக்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்பு டன்னுக்கு, 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய் வினியோகிக்க வேண்டும் என, தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய - மாநில அரசுகள் இன்றுவரை செவி சாய்க்காமல் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us