sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாததால் அச்சம்

/

கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாததால் அச்சம்

கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாததால் அச்சம்

கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாததால் அச்சம்


ADDED : செப் 04, 2024 01:45 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;வால்பாறை நகரில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகள் அதிக அளவில் ரோட்டில் உலா வருகின்றன. ரோட்டில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளாலும், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், சமீப காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகளால் விபத்துக்குள்ளாகி வருவதும் வாடிக்கையாகி விட்டது.

மக்கள் கூறியதாவது:

வால்பாறையில், பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வருவதால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் நடமாடுவதால் மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us