sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கைப்பந்து போட்டியில் முதல்பரிசு: பழங்குடியின மாணவர்கள் சாதனை

/

கைப்பந்து போட்டியில் முதல்பரிசு: பழங்குடியின மாணவர்கள் சாதனை

கைப்பந்து போட்டியில் முதல்பரிசு: பழங்குடியின மாணவர்கள் சாதனை

கைப்பந்து போட்டியில் முதல்பரிசு: பழங்குடியின மாணவர்கள் சாதனை


ADDED : ஆக 19, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

கோட்டூர் குறுமைய அளவில் நடந்த கைப்பந்து போட்டியில், பழங்குடியின பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்றனர்.

வால்பாறை நகரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இந்தப்பள்ளியில் பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 152 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர்கள் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி ஊக்குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கோட்டூர் குறுமைய அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில், 14 வயது மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில், வால்பாறை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றனர்.

இதே போல், 14 வயது மாணவியருக்கான கைப்பந்து போட்டியில் இதே பள்ளியை சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

வேட்டைக்காரன்புதுார் ஆல்வா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறகு பந்து போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாணவியர் இரண்டாமிடம் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பாராட்டி பரிசு வழங்கினர்.

கோவை நேசம் டிரஸ்ட் இயக்குனர் செந்தில்குமார், செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கூறுகையில், 'பழங்குடியின மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது, பிற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். வால்பாறை வட்டார அளவில் நடக்கும் போட்டிகளிலும், கோட்டூர் குறுமைய அளவில் நடக்கும் போட்டிகளிலும் மாணவர்கள் திறமைகளை திறம்பட வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். வனத்துறை சார்பில் கடந்த மாதம் நடந்த ஓவியப்போட்டியிலும், மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்,' என்றனர்.

உடுமலை


உடுமலை குறுமைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, என்.வி., மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

உடுமலை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடக்கிறது. இதில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு மாணவியருக்கான கால்பந்து போட்டியில், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி அணி முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மாணவர்களுக்கான கால்பந்து போட்டி ஜூனியர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது. கைப்பந்து போட்டியில் சூப்பர்-சீனியர் பிரிவில் மாணவர்கள் மற்றும் மாணவியர் என இரு பாலர் போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலிடத்தில் வெற்றி பெற்ற அணிகள், மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us