/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண் பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்
/
கண் பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்
ADDED : ஆக 30, 2024 10:21 PM
கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு, தபால் நிலையம் சந்திப்பில் அமைந்துள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மருத்துவமனையில் கண் பாதிப்பு கண்டறியும் பரிசோதனை முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழா முன்னிட்டு, இலவச பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
மருத்துவமனையில், 25க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்கள், எங்கள் கண்புரை அறுவை சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுகின்றனர். இவர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயர்ந்த தரத்திலான சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆண்டு விழா முன்னிட்டு நடத்தப்படும், கண் பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாமில், ரத்த சர்க்கரை பரிசோதனை, உலர் கண் பரிசோதனை, குளுக்கோமா, விழித்திரை, ஆப்டோமெட்ரிஸ்ட் மதிப்பீடு, கணினி மயமாக்கப்பட்ட பார்வை பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கிய, ரூ.1,250 மதிப்பிலான பேக்கேஜ் மற்றும் 20 முதல் 40 வயதுடையவர்களுக்கு, ரூ.3,000 மதிப்பிலான லேசிக் ஸ்கிரீனிங் பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது; மருத்துவரின் ஆலோசனையும் இலவசம்.
இத்துடன், ஆண்டு விழா முன்னிட்டு, லேசிக் சிகிச்சைக்கு 25 சதவீதமும், கண்புரை சிகிச்சைக்கு 10 சதவீதமும், ஆப்டிகல்ஸில் 15 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
முதலில் பதிவு செய்யும் 500 பேருக்கு இலவச குடும்ப கண் பரிசோதனை தொகுப்பு வழங்கப்படுகிறது. முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 77369 05222 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.