/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி சுற்றுலாவுக்கு ஹாங்காங் 'பறந்த' அரசு பள்ளி மாணவர்கள்
/
கல்வி சுற்றுலாவுக்கு ஹாங்காங் 'பறந்த' அரசு பள்ளி மாணவர்கள்
கல்வி சுற்றுலாவுக்கு ஹாங்காங் 'பறந்த' அரசு பள்ளி மாணவர்கள்
கல்வி சுற்றுலாவுக்கு ஹாங்காங் 'பறந்த' அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 23, 2024 09:07 PM
கோவை:மன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில் முதற்கட்டமாக, 20 மாணவர்கள் கல்வி சுற்றுலாவுக்கு ஹாங்காங் சென்றுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான மன்ற போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
2023-24ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆறு முதல், 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்டம், மாநில அளவிலான பேச்சு, வினாடி -- வினா போன்ற மன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
கடந்த பிப்., மாதம் நடந்த இப்போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான மன்ற போட்டிகள், மார்ச் மாதம் நடந்தன.
இதில், வெற்றி பெற்றவர்களில் முதற்கட்டமாக, 20 மாணவர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவர் ஆகியோர், ஹாங்காங் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
இதில், கோவை மாவட்டம் அசோகபுரம் பள்ளியில், 9ம் வகுப்பு பயிலும், மாணவி ஷாலினியும் ஒருவர். இவர்கள் வரும், 27ம் தேதி வரை ஹாங்காங்கில் தங்கி, கல்வி சுற்றுலா மேற்கொள்கின்றனர்.

