sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் கடத்தலை தடுக்க அரசு முயற்சி

/

செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் கடத்தலை தடுக்க அரசு முயற்சி

செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் கடத்தலை தடுக்க அரசு முயற்சி

செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் கடத்தலை தடுக்க அரசு முயற்சி

2


ADDED : ஜூலை 09, 2024 07:21 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 07:21 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தமிழகத்தில், 1,482 ஏக்கர் பரப்பளவில், 1.20 லட்சம் செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுதும் பசுமை பரப்பை அதிகரிக்க, பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக, வளம் குன்றிய வனப்பகுதிகள், தனியார் நிலங்கள், விவசாய நிலங்களை ஒட்டிய பகுதிகள், அரசு துறை நிலங்கள் என பல்வேறு இடங்களில், மரங்கள் நடப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட சில பகுதிகளில், சந்தன மரங்கள், செம்மரங்கள் வளர்ப்பிலும் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக, செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சந்தன மரங்கள் போன்று செம்மரங்களுக்கு சர்வதேச அளவில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. இதை முறையாக வளர்த்து விற்பனை செய்வதை ஊக்குவித்தால், இது தொடர்பான கடத்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கலாம்.

தமிழகத்தில், திருச்சி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார் ஆகிய மாவட்டங்களில், செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு, 1,482 ஏக்கரில், 1.20 லட்சம் செம்மர கன்றுகள், விவசாயிகள் வாயிலாக வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இத்திட்டத்துக்காக தமிழக அரசு, 1.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us