sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தைகளுக்கு ஓவியம் மீது ஆர்வம் ஏற்படுத்த 'ஹைபர் பார்க்'

/

குழந்தைகளுக்கு ஓவியம் மீது ஆர்வம் ஏற்படுத்த 'ஹைபர் பார்க்'

குழந்தைகளுக்கு ஓவியம் மீது ஆர்வம் ஏற்படுத்த 'ஹைபர் பார்க்'

குழந்தைகளுக்கு ஓவியம் மீது ஆர்வம் ஏற்படுத்த 'ஹைபர் பார்க்'


ADDED : ஆக 20, 2024 11:54 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், 'ஹைபர் பார்க்' திறக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் இந்தியா அறக்கட்டளை, ஏசியன் பெயின்ட்ஸ், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் மற்றும் கோயம்புத்துார் விழா குழுவினர் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை, கோவை கலெக்டர் கிராந்திக்குமார் திறந்து வைத்தார்.

கோயம்புத்துார் விழா தலைவர் அருண் கூறுகையில், ''இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பயன்பாட்டுக்காக, இந்த பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குழந்தைகளுக்கு ஓவிய ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்துார் விழா சார்பில் இங்குள்ள குழந்தைகளுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஓவியப்போட்டி நடத்த இருக்கிறோம்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி, கோயம்புத்துார் விழாவில் நடக்கும் ஓவிய சந்தையில் பங்கேற்க வைக்க இருக்கிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us