/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு ;விலை உயர்வதற்கு வாய்ப்பு
/
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு ;விலை உயர்வதற்கு வாய்ப்பு
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு ;விலை உயர்வதற்கு வாய்ப்பு
வாழைத்தார் வரத்து அதிகரிப்பு ;விலை உயர்வதற்கு வாய்ப்பு
ADDED : செப் 04, 2024 11:29 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், கடந்த வாரத்தை விட வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மார்க்கெட்டில், தற்போது செவ்வாழை கிலோ - 60, நேந்திரன் - 50, கதளி - 45, ரஸ்தாளி, பூவன், சாம்பிராணி -- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, பூவன் வகை வாழைத்தார் கிலோவுக்கு 3 ரூபாய் விலை குறைந்துள்ளது. கதளி மற்றும் ரஸ்தாளி வகை வாழைத்தார் கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர் வரத்து உள்ளது. விலையில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரையிலும் மாற்றம் இருந்தது. வரும் நாட்களில் விலை உயரும் வாய்ப்புள்ளது,' என்றனர்.