sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்

/

தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்

தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்

தென்மேற்கு பருவ காற்று துவக்கம் காற்றாலை மின் உற்பத்தி ஆரம்பம்

1


ADDED : மே 04, 2024 01:36 AM

Google News

ADDED : மே 04, 2024 01:36 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:தென்மேற்கு பருவ காற்று வீச தொடங்கியதால், காற்றாலை மின்சார உற்பத்தி இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2.3 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.

இந்திய காற்றாலைகள் சங்க தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறியதாவது:

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவ காற்றால், மே முதல் நாளில், 1.42 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. இரண்டு நாட்களில், 2.3 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.

இந்த மின் உற்பத்தி, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 5 சதவீத பங்கு. வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது, நாள் ஒன்றுக்கு 100 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி இருக்கும்.

தமிழகத்தின் மின் தேவையில், காற்றாலை மின்சாரமும் பங்கு வகிக்கிறது. ஓரிரண்டு கி.மீ., வேகத்தில் வீசிய காற்று, தற்போது மணிக்கு 19 கி.மீ., வேகம் வரை வீச தொடங்கியுள்ளது.

இந்த காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் வெப்பநிலை குறையும். வெப்பத்தின் தாக்கம் குறையும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us