/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடநாடு வழக்கில் இருவரிடம் விசாரணை
/
கோடநாடு வழக்கில் இருவரிடம் விசாரணை
ADDED : ஆக 07, 2024 12:05 AM
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர், கோவைசி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்காக நேற்று ஆஜராகினர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெ., மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த, 2017ம் ஆண்டு ஓம்பஹதுார் என்ற பாதுகாவலரை கொலை செய்து, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதையடுத்து, போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் உயிரிழந்தார்.
தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. இதுவரை, 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் நேற்று மதியம், போலீசார் விசாரணை நடத்தினர்.