sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பங்கேற்று பயன்பெற அழைப்பு

/

வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பங்கேற்று பயன்பெற அழைப்பு

வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பங்கேற்று பயன்பெற அழைப்பு

வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பங்கேற்று பயன்பெற அழைப்பு


ADDED : ஜூலை 08, 2024 11:00 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;வரும் 19ம் தேதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.

அதன்படி, வரும் 19ம் தேதி காலை 10:00 மணி முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேரடியாக நடக்கவுள்ளது. முகாமில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விபரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெறலாம்.

முகாமில் பங்கேற்க, வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பணியிடங்களுக்கு, மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு, பணி நியமன ஆணை, உடனடியாக வழங்கப்படும்.

பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.

பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய, இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

விருப்பமுள்ள மனுதாரர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மனுதாரர்கள் அதிகளவில் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

விபரங்களுக்கு, 0422 - 2642388 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us