sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆபத்தான நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் விபத்துக்கு முன் நடவடிக்கை எடுப்பது அவசியம்

/

ஆபத்தான நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் விபத்துக்கு முன் நடவடிக்கை எடுப்பது அவசியம்

ஆபத்தான நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் விபத்துக்கு முன் நடவடிக்கை எடுப்பது அவசியம்

ஆபத்தான நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் விபத்துக்கு முன் நடவடிக்கை எடுப்பது அவசியம்


ADDED : மே 17, 2024 12:55 AM

Google News

ADDED : மே 17, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பு முறையாக பராமரிக்கப்படாததால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு அபாயத்துடன் காட்சியளிக்கிறது; மீண்டும் அசம்பாவிதம் நடக்காது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

கோவை, உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், கடந்த, 2007ம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில், 13 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, வீட்டு வசதி வாரியமானது, 352 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைத்தது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ரூ.250 முதல் வாடகை செலுத்தி வருகின்றனர்.

இக்கட்டடத்தில் மரங்கள் ஆள் உயரத்துக்கு வளர்ந்துள்ளதால் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், விபரீதம் நடக்கும் வாய்ப்புள்ளது. மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் புழுக்கள் உற்பத்தியாகி சுகாதாரமாற்ற முறையில் உள்ளது.

கழிவுநீர் தொட்டியும் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது.இப்படி ஏராளமான பிரச்னைகளை அங்கு வசிப்பவர்கள் அனுபவிக்கின்றனர். பராமரிப்பின்மையால் மீண்டும் ஓர் விபத்துக்கு ஏற்படாது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கு வசிப்பவர்கள் கூறுகையில்,'தினமும் பயத்துடன் வாழ்கிறோம். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாதம் ரூ.150 பராமரிப்பு தொகை குடியிருப்போர் சங்கம் தரப்பில் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், ஓராண்டுக்கும் மேலாகபராமரிக்கவில்லை. இப்பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்' என்றனர்.

அவசர பணிக்கு உத்தரவு!

அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் மீது வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக அகற்றி அவசரப்பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.கட்டடத்தை பராமரிக்க ரூ.1.25 கோடி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இன்னும் நிதி வரவில்லை. நிதி வந்தவுடன் பணிகள் வேகப்படுத்தப்படும்.

- மாடசாமி, கோட்ட நிர்வாக பொறியாளர்,

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கோவை.

சங்க தேர்தல்

வாரிய குடியிருப்புகளில் 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு, சங்கங்களே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பராமரிப்புக்கான மொத்த செலவில் சங்கம் தரப்பில், 50 சதவீதம், அரசு தரப்பில்,50 சதவீதம் தரப்படும். இதற்கென, இக்குடியிருப்பில் அடுத்த மாதம் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யதேர்தல் நடத்தவுள்ளதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us