/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ வாரி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
ஸ்ரீ வாரி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 29, 2024 02:13 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீ வாரி மலையப்ப சுவாமி ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா மூன்று நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா என நடத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சியும், வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது.
இதில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கே.ஜி. குழுமத்தலைவர் பாலகிருஷ்ணன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.

